மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் கைதான பள்ளி நிர்வாகிகள் உட்பட 5 பேரை ஒரு நாள் சிபிசிஐடி விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்துஅ ந்க்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முரையில் பள்ளியில் உள்ள பொருட்கள் மற்ரும் வாகனங்கள் சூறையாடப்பட்டன. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள சிபிசிஐடியினர் மற்ரும் புலானாய்வு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் கைதான பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக்கோரி நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதனை தொடர்ந்து பள்ளி தாளாளர் உட்பட 5 பேரையும் ஒருநாள் காவலில் மட்டும் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இன்று மதியம் 12.30 மணி முதல் நாளை மதியம் 12.30 மணி வரை 5 பேருக்கும் சிபிசிஐடி காவல் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…