Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காலம் மாறிவிட்டது..புரிந்து கொள்ளுங்கள்...மாணவர்கள் போராட்டத்தில் மாஸ் காட்டிய மேயர்...!

Bala July 22, 2022 & 16:36 [IST]
 காலம் மாறிவிட்டது..புரிந்து கொள்ளுங்கள்...மாணவர்கள் போராட்டத்தில் மாஸ் காட்டிய மேயர்...!Representative Image.

கேரளா மாநிலம் திருவணந்தபுரத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் வசதிக்காக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிறுத்ததில் மாணவ, மாணவிகள் தினமும் அரட்டை அடித்து வந்துள்ளனர். இதனை அப்பகுதி வாசிகள் கண்டித்துள்ளனர். ஆனால் அதனை பொருட்படுத்தாத மாணவ, மாணவிகள், வழக்கம் போல் அரட்டை அடித்து வந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சிலர் பேருந்து நிறுத்தை சேதப்பட்டுத்தியுள்ளனர். மேலும் உட்கார வைக்கப்பட்டிருந்ததை சிதைத்து நெருக்கமாக அமர முடியாதபடி உடைத்தனர். இதனைக்கண்டித்த கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில மாணவிகள், மாணவர்கள் மீது அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரவேற்பு, விமர்சணமும் பெற்றது.

இதனையடுத்து சம்பவ இடத்தை பார்வையிட்ட அப்பகுதி மேயர், கேரளாவில் ஆணும், பெண்ணும், ஒன்றாக அமர எந்த தடையும் இல்லை என்றும், முற்போக்கு சிந்தனை உடைய சமூகத்தில் இதுபோன்ற நடவடிக்க்கையில் ஈடுபட்டதை ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.

மேலும், இன்னும் பழங்கால சிந்தனையில் ஊறி திளைப்பவர்கள், காலம் மாறிவிட்டதை புரிந்து கொள்ள வேண்டும். பாழடைந்த இந்த பஸ் நிறுத்தம் பொதுப்பணித்துறையின் அனுமதி இன்றி கட்டப்பட்டு உள்ளது. விரைவில் இங்கு நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிறுத்தம் கட்டப்படும், என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்