ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கியதை அடுத்து உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா இந்தியாவை கடுமையாக சாடியுள்ளார்.
9வது இந்தியா-தாய்லாந்து கூட்டுக் கமிஷன் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும், தாய்லாந்தில் உள்ள இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்களை சந்திக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காகவும் ஜெய்சங்கர் நேற்று தாய்லாந்து சென்றிருந்தார். அப்போது பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியர்களால் அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்க முடியாது என்றும், அதனால் ரஷ்யாவுடனான கச்சா எண்ணெய் ஒப்பந்தங்களை தொடர்ந்து செய்து வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கியதை அடுத்து உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா இந்தியாவை கடுமையாக சாடியுள்ளார்.
அதில், இந்தியாவிற்கு ரஷ்யா வழங்கும் கச்சா எண்ணெயின் ஒவ்வொரு பீப்பாய்களிலும் உக்ரேனியர்களின் இரத்தமும் கலந்து உள்ளது என்றும்,
நடுநிலைமையே சிறந்தது என்று நினைப்பவர்களே, நீங்கள் எதில் நடுநிலை வகிக்கிறீர்கள்? 'நடுநிலைமை' என்பது கபட நாடகம் என இந்தியாவை குறிப்பிட்டு உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா கடுமையான விமர்சித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…