மத்திய பிரதேச மாநிலத்தில் முதலாமண்டு மருத்துவ கல்லூரி மாணவிகளை மோசமான முறையில் ராகிங் செய்த சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை தங்கள் அறைக்கு அழைத்த சீனியர் மாணவர்கள் தலையணையுடன் உறவு வைத்துக்கொள்ளுமாறு ராகிங் செய்துள்ளனர். மேலும் சில மாணவிகளின் பெயரை கூறி அவர்களை கெட்ட வார்த்தியில் திட்டும் படி கட்டாயப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக பேராசிரியர்களிடம் புகார் அளித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், யுஜிசியின் ராகிங் தடுப்பு குழுவுக்கு சில முதலாமாண்டு மாணவர்கள் போன் வாயிலாக புகார் தெரிவித்தனர். அதன்படி யுஜிசி நிர்வாகம் ராகிங் தொடர்பால்க போலீசில் புகார் அளிக்கும் படி கல்லூரி நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது. இதனையடுத்து போலீசில் புகார் அளிக்க்ப்பட்டுள்ளது. புகாரின் படி மாணவர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…