சீனாவில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்த பணத்தை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்சி அடைந்துள்ளனர்.
சீனாவின் ஹனால் பகுதியில் உள்ள பேங்க் ஆப் சீனாவின் கிளையில் வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு கணக்கில் இருந்து பணத்தை எடுக்க அனுமதிக்கவில்லை , இதனால் பொதுமக்கள் ஏடிஎம்களில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களை கட்டுப்படுத்தும் வகையில் சீனா அரசு பீரங்கிகளுடன் தெருக்களில் ரோந்து வருவதால் பொதுமக்கள் அதிர்சியடைந்துள்ளனர். ஆனால் சீன அரசு தரப்பில், முதலீட்டாளர்களிடம் இருந்து வங்கியை பாதுகாக்கும் நடவடிக்கையாக பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1989 ம் ஆண்டு சீனாவில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடந்த நிலையில், அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வந்தனர். இதனையடுத்து அங்கு சீன ராணுவம் வரவழைக்கப்பட்டு பீரங்கி தாக்குதல் நடத்தியில் ஆயிரக்கணக்காண மாணவர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தற்போது தெருக்களில் பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மீண்டும் அந்த கரும்புள்ளி நடந்து விடுமா என்ற அச்சத்தில் சீன மக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…