Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆப்கானிஸ்தானில் ஐ.நா. அதிகாரிகளை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்..!

Bala July 30, 2022 & 10:20 [IST]
ஆப்கானிஸ்தானில் ஐ.நா. அதிகாரிகளை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்..!Representative Image.

ஆப்கானிஸ்தானில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்த ஐ.நா. அதிகாரிகளை குறிவைத்து கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.  

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஷ்பகீசா டி20 கிரிக்கெட் லீக் போட்டி வெகுவிமர்சியாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற  உள்ளூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த துயர சம்பவத்தில் கிரிக்கெட் பார்க்க வந்த 4 பேர் காயமடைந்ததாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை தகவல் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு படையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இது ஒரு தற்கொலைப்படை தாக்குதல் என தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காபூலில் இதேபோல மற்றொரு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்