Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நன்கொடை தர மறுத்த டாஸ்மாக் ஊழியர்.. பாட்டிலால் குத்திய மர்ம கும்பல்

Bala May 18, 2022 & 10:17 [IST]
நன்கொடை தர மறுத்த டாஸ்மாக் ஊழியர்.. பாட்டிலால் குத்திய மர்ம கும்பல்Representative Image.

திருவாரூர் அருகே 5 பேர் கொண்ட  கும்பல் ஒன்று டாஸ்மாக் ஊழியரை பாட்டிலால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் அருகேயுள்ள கானூர் அரசு மதுபானக்கடையில் மேலாளராக ரமேஷ் என்வபர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்றைய தினம் பணியில் இருந்த போது, அந்த பகுதியை சேர்ந்த சுமார் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று வந்துள்ளது. அந்த கும்பல் மேலாளர் ரமேஷிடம் சென்று கோயில் விழாவிற்கு நன்கொடை வழங்குமாறு கேட்டுள்ளனர். ரமேஷ் நன்கொடை தர மறுத்ததால், ஆத்திரமடைந்த அந்த கும்பல், மதுபாட்டிலை உடைத்து குத்தியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரமேஷ் என்பவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். இந்த சமபவம் குறிந்து தகவலறிந்து திருவாரூர் டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்