இந்தியாவில் கொரோனா பரவல் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. பின்னர் தடுப்பூசி காரணமாக அது சற்று குறைந்தாலும் புது புது வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றின் ஒன்று தான் ஒமிக்ரான். இந்த ஒமிக்ரான் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தினாலும் அது அவ்வளவாக பரவவில்லை. இந்நிலையில் இந்த ஒமிக்ரான் புதிய வேரியண்ட் பரவ தொடங்கியுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் முதன்முறையாக 7 பேருக்கு புதிய வகை ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மராட்டிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் BA4 வகை தொற்றால் 4 பேரும், BA5 வகை தொற்றால் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய வகை ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 7 பேரில் 2 பேர் தென்னாப்பிரிக்கா, பெல்ஜியம் சென்று திரும்பியவர்கள் ஆவர் என்வது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…