செனகல் நாட்டின் மேற்கு நகரமான திவாவான் நகரில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு அதிபர் மேக்கி சால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது; செனகல் நாட்டில் உள்ள மேம் அப்து அஜீஸ் சை டபக் மருத்துவமனையில் நள்ளிரவு ஏற்ப்பட்ட தீவிபத்தில் 11 குழந்தைகள் இறந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த குழந்தைகள் பிறந்து ஒரு நாள் மட்டுமே ஆனதாகவும் கண்ணீர் மல்க பதிவிட்டுள்ளார்.
மேலும் குழந்தைகளின் தாய்மார்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு, எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றும் மூன்று குழந்தைகள் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
உலக சுகாதார மையம் தொடர்பாக சந்திப்பில் கலந்துகொள்வதற்காக ஜெனீவா சென்றிருந்த அந்நாட்டின் சுகாதார அமைச்சர் அப்துலே டியூஃப் சார், உடனடியாக செனகல் திரும்புவதாகக் கூறினார். இந்த நிலைமை மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் மிகவும் வேதனையானது," என்று அவர் கூறினார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…