நடந்து முடிந்த குரூப்-2 தேர்வுகளுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையமாகும்.
இநிலையில் தற்போது குரூப்-2 பதவிகளில் உள்ள 5,529 காலி பணியிடங்களுக்கான தேர்வு கடந்த மே-21ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டு, முதன்மை எழுத்துத்தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் கலந்தாய்வு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நடந்து முடிந்த குரூப்-2 தேர்வின் தற்காலிக விடைக்குறிப்பு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (tnpsc.gov.in) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் விடைகளில் ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…