நேற்று வரை கூலித் தொழிலாளியின் மகள் எனும் அடையாளத்துடன் இருந்தவர் இன்று மிஸ் தமிழ்நாடு எனும் சிறப்பை பெற்றுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த மனோகர் கட்டிட தொழிலாளியாக உள்ளார். 20 வயதான இவரது மகள் ரக்சயா கல்லூரி படிப்பை முடித்துள்ளார். இவருக்கு சிறு வயது முதல் அழகிப் போட்டியில் வெல்ல வேண்டும் என்பது லட்சியமாக இருந்துள்ளது.
இதனால் குடும்ப வறுமையையும் பொருட்படுத்தாமல் ரக்சயா தனது சொந்த முயற்சியில் பகுதி நேர வேலை செய்து இதற்காக தன்னை தயார்படுத்தி வந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு நடந்த மோனோ ஆக்டிங் நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்று அரசு சார்பில் மலேசியா அழைத்து செல்லப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ஃபார் எவர் ஸ்டார் இந்தியா அவார்ட்ஸ் நடத்திய மாவட்ட அளவிலான அழகிகள் போட்டியில் கலந்து கொண்டு தேர்வாகியுள்ளார். இதையடுத்து மாநில அளவிலான போட்டி ஜெய்பூரில் கடந்த 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடந்தது.
இந்த மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதில் தமிழகத்திற்கான போட்டியில் இளம்பெண் ரக்சயா மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
இதே போல் அனைத்து மாநிலங்களிலும் வின்னர், ரன்னர் என சுமார் 750 பேர் அறிவிக்கப்பட்டு, அவர்களுக்குள் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. வரும் டிசம்பரில் இந்த இறுதிப்போட்டி நடைபெற உள்ள நிலையில், அதில் தேர்வாகும் நபர் மிஸ் இந்தியா பட்டத்தை வெல்ல உள்ளார்.
இந்நிலையில், நிச்சயம் தான் மிஸ் இந்தியா பட்டத்தை தட்டிச் செல்வேன் என்று நம்பிக்கையோடு பேசுகிறார் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் ரக்சயா.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…