திருமலை திருப்பதி பிரமோற்சவ விழாவிற்கு பெருமாளுக்கு 427 பெருமாள் முகங்களும், 27 ஜோடி யானைகள் உருவமும் கொண்டு உருவம் பதித்து கைத்தறியில் நெசவு செய்து அசத்தி உள்ளனர் காஞ்சிபுரம் தம்பதியினர். அந்த புடவையில், ஆதிசேஷன் மீது அரங்கநாதரும், மகாலட்சுமியும் அமர்ந்திருப்பது போல உருவம் பதித்திருக்கும்
இந்த பட்டுச்சேலையை வடிவமைத்தவர்கள், காஞ்சிபுரத்தில் விளக்கொளி பெருமாள் கோவில் தோப்புத் தெருவில் வசிக்கும் குமரவேலு, கலையரசி என்பவர் ஆவார். இவர்கள், இந்த பட்டுச்சேலையை வடிவமைப்பதற்கு 8 நாள்களாக இரவு, பகல் பாராது விரதம் இருந்து கைத்தறியில் நெசவு செய்து அசத்தி உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…