பிளஸ் 2 பொதுத்தேர்வில் குவியல் குவியலாக பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 11 அறை கண்காணிப்பாளர்கள் கூண்டோடு தேர்வு பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடைபெறாமல் இருந்த நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இந்தாண்டு நடத்தப்பட்டது. இந்நிலையில், நாமக்கல் கொல்லிமலையில் 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்காக ஜெராக்ஸ் கடையில் பிட் பேப்பர்கள் தயார் செய்துகொண்டிருந்தபோது பிடிப்பட்டனர். இதையடுத்து தேர்வு அறையில் உள்ள மாணவர்களிடம் சோதனை நடத்தியதிலும் சுமார் 1 கிலோ அளவிலான பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், 11 அறை கண்காணிப்பாளர்கள் கூண்டோடு தேர்வு பணியில் இருந்து நீக்கம் செய்து தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…