இலங்கை சிறையில் இருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 இந்திய மீனவர்களை அந்நாட்டு நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இவர்கள் அனைவரும் பின்னர் இலங்கையின் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சிறைக்காவல் முடிந்து இன்று மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் 6 போரையும் விடுதலை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து உரிய நடைமுறைகளை பின்பற்றி விரைவில் அவர்கள் இந்தியா திரும்ப உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…