ஜம்மு, காஷ்மீரில் நடத்தப்பட்ட மூன்று வெவ்வேறு எண்கவுண்டர்களில் 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு, காஷ்மீர் மாநிலம் குப்வாரா, குல்காம் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் 24 மணி நேரத்திற்குள் நடத்தப்பட்ட மூன்று வெவ்வேறு எண்கவுண்டர்களில், இரண்டு பாகிஸ்தானியர்கள் உட்பட ஏழு பயங்கரவாதிகளை ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் இராணுவம் சுட்டுக்கொண்றதாக தெரிவித்துள்ளது. தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள சத்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள லோலாப் என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய துப்பாக்கிச் சண்டையில் ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் ராணுவம் நான்கு பயங்கரவாதிகளை கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இவர்களிடம் இருந்த பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…