ஒரு ஆண்டில் மட்டும் 94 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
யூடியூப் சேனல்களை ஒன்றிய அரசு முடக்கியுள்ளதா? அப்படி எனில் அதன் எண்ணிக்கை மற்றும் விவரங்கள்? எதற்காக ? என்பது குறித்து மக்களவையில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், தகவல் தொழில்நுட்ப சட்டம் 69ஏ பிரிவின் படீந்தியாவின் இறையான்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதன்படி கடந்த 2021-2022ம் ஆண்டில், 94 யூடியூப் சேனல்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 74 செய்தி சேனல்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69 ஏ பிரிவை மீறியதற்காக இதே காலகட்டத்தில் 560 யூடியூப் சேனல்கள் தடை செய்யப்படவுள்ளதாகவும், மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…