ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டு தலம் அருகே நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இருந்து ஆங்காங்கே குண்டு வெடிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. அந்தவகையில், ஆப்கானிஸ்தனின் தலைநகர் காபூலில் உள்ள ஷியா பிரிவினர் மத வழிபாட்டு தலம் அருகே குண்டு வெடித்தது. இதில் 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 18 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கானிஸ்தானில் அடிக்கடி குண்டுவெடிப்பு தாக்குதலை ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…