Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கோவிலில் அம்மன் சிலை எரிப்பு.. திருவள்ளூரில் பதற்றம்!!

Sekar October 22, 2022 & 13:40 [IST]
கோவிலில் அம்மன் சிலை எரிப்பு.. திருவள்ளூரில் பதற்றம்!!Representative Image.

திருவள்ளூர் மாவட்டத்தில் கோவிலில் இருந்த அம்மன் சிலை தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர்  மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே உள்ள ஆதிவராகபுரம் கிராமத்தில் நிம்மாளி அம்மன் என்ற கோவில் உள்ளது. இந்த கோவில் பூட்டப்பட்டிருந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் கோவிலில் இருந்த 7 அடி நிம்மாளியம்மன் மரச்சிலையை தீவைத்து எரித்துள்ளனர். 

இன்று காலை கோவில் நிர்வாகி வந்து பார்த்தபோது, அம்மன் சிலை தீ வைத்து எரிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து கோவில் நிர்வாகி புகாரின் பேரில் ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவிலில் அம்மன் சிலை எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்