கூடலூர் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்த உயிருடன் புதைக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நிமினிவயல் பகுதியைச் சேர்ந்தவர் தேவன். இவரது 21 வயது மகள் பிரியா ஒருவரை காதலித்து வந்த நிலையில், 7 மாதம் கார்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரியாவுக்கு வயிற்று வலி அதிகமாக இருந்ததால், கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அவரது தந்தை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.
அப்போது பிரியாவின் குழந்தை இறந்த நிலையில் பிறந்ததாக கூறப்படுகிறது. இதனை யாருக்கும் தெரிவிக்காத தேவன், வீட்டின் பின்புறம் குழந்தையை புதைத்தாக கூறப்படுகிறது. மேலும் ரத்தப்போக்கு அதிகமான காரணத்தால் பிரியாவும் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக புகார் எழுந்த நிலையில், புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்த அதிகாரிகள், உடற்கூராய்வுக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…