Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிறுவனை கடித்து குதறிய நாய்… கேரளாவில் நடந்த பயங்கர சம்பவம்…!

Gowthami Subramani September 13, 2022 & 14:30 [IST]
சிறுவனை கடித்து குதறிய நாய்… கேரளாவில் நடந்த பயங்கர சம்பவம்…!Representative Image.

சைக்கிளில் குழந்தைக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனை நாய் பயங்கரமாக தாக்கி கடித்து குதறியதாகக் கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக, சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரையும் நாய்கள் கடித்து வருவதைச் சமூக வலைத் தளங்களில் பார்த்து வருகிறோம். வீட்டில் செல்லப்பிராணிகளாக நாய்கள் வளர்ப்பது பெரும்பாலான இடங்களில் அதிகமாகி வந்துள்ளது. இவ்வாறு சைக்கிளில் குழந்தைக்கு விளையாட்டு காட்டி கொண்டிருந்த சிறுவன் ஒருவனை நாய் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெருவில் குழந்தை ஒன்றுடன் சைக்கிளில் வேடிக்கை காட்டி கொண்டிருந்தால் ஒரு சிறுவன். சிறுவனை ஏதோ காத்திருந்து பழிவாங்குவது போல, அந்த சமயத்தில் திடீரென வந்த நாய் ஒன்று அவன் மீது பாய்ந்து கடித்து குதறியதாகக் கூறப்படுகிறது.

நாய் பாய்ந்து வந்ததும் நிலை தடுமாறி கீழே விழுந்த சிறுவனை விடாமல் சிறுவனின் ஆடையைப் பிடித்து இழுத்துள்ளது. பின்னர், தப்பிக்க முயன்ற சிறுவன் கையால் விரட்டிய போது, அவனது கையை விடாமல் வெறித்தனமாக கடித்துள்ளது.

இந்த நிலையில், வீட்டிற்கு அருகில் இருந்த குழந்தையை, அந்த வீட்டாளர்கள் தூக்கிக் கொண்டனர். பின்னர், அந்த சிறுவன் எப்படியோ தப்பித்து அருகில் இருந்த வீட்டிற்குள் சென்று கேட்டை மூடிக் கொண்டான். பிறகு அந்த நாய் அங்கிருந்து ஓடிச் சென்றது.

நெஞ்சை பதர வைக்கும் இந்த சம்பவத்தால், அந்தப் பகுதியில் பரபரப்பாக இருந்தது. இது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்