மின் கம்பத்தின் மீது கார் மோதியதில், ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் அரங்கேறிய இந்த சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரில் இருந்து, வாரணாசி நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று அதன் கட்டுப்பாட்டை இழந்து, நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே ஒரு குழந்தையும், 4 பெண்களும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து அறிந்த உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…