பைக்கில் வந்த நான்கு இளைஞர்கள் எரிந்து கொண்டிருந்த பட்டாசு மீது விழுந்து, அவர்களை பட்டாசு பதம் பார்த்துள்ளது.
தீபாவளி பண்டிகையில் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடிப்பது வழக்கமான ஒன்றாகும். அதே சமயம், பட்டாசு வெடிப்பதில் மிகக் கவனமாக கையாள வேண்டும். பட்டாசு வெடிப்பதில் சில வழிமுறைகள் உள்ளன. அவற்றின் படி கவனமாக பட்டாசு வெடிக்க வேண்டும்.
ஆனால், இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் பட்டாசை அசாதாரணமாக கையாள்கின்றனர். அந்த வகையில் பட்டாசை பதம் பார்க்க நினைத்த நான்கு இளைஞர்களை பட்டாசு பதம் பார்த்தது. இவர்களது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர்கள் நான்கு பேரும் எரிந்து கொண்டிருந்த பட்டாசுவின் நடுவே, பைக்கில் செல்ல முற்பட்டுள்ளனர். ஆனால், தடுமாறி பைக்குடன் பட்டாசுமேலே விழுந்து, அவர்கள் வேக வேகமாக தெறித்து ஓடினர்.
இவர்கள் எரியும் பட்டாசுவிலிருந்து வெளிவருவது போல வீடியோ எடுக்க வேண்டும் என்று நினைத்தனர். இறுதியில் இவர்களைப் பட்டாசு பதம் பார்த்து விட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…