ஜெயங்கொண்டம் அருகே காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ காட்சி இன்று நிகழ்ந்தது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காரைக்குறிச்சி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மற்றும் ஆவணி மாதத்தில் லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு நடைபெறும்.
அதன்படி இன்று காலை 6:00 மணிக்கு சூரிய உதயத்தின்போது அதிலிருந்து பிரதிபலிக்கப்பட்ட சூரியக்ஒளிக்கதிரானது நேரிடையாக லிங்கத்தின் மீது பட்டு பொன்னொளியில் ஒளிர்ந்தது. இந்த அரிய காட்சியானது சுமார் ஐந்து நிமிடம் நீடித்தது. இந்த அரிய நிகழ்வானது இன்னும் ஓரிரு நாட்களில் மட்டுமே நிகழலாம் என கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் தெரிவித்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…