கேரளாவில் உரிமையாளர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், அவரது புகைப்படம் மாட்டப்பட்டிருந்த இடத்திற்கு அருகே அடிக்கடி சென்று வளர்ப்பு நாய் ஒன்று கண்ணீர் வடிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவின் கோழிக்கோடு அருகே உள்ள காரப்பம்பா பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் கூடுதல் மாவட்ட ஆட்சியராக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இவர் உடல் நலன் குன்றி உயிரிழந்தார். குடும்பத்தினர் அவரது புகைப்படத்தை வீட்டு சுவரின் இரண்டு பகுதிகளில் பொருத்தியிருந்தனர்.
இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர்களது வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் லியோ என்ற நாய் அடிக்கடி அவரது இரண்டு புகைப்படங்களையும் நோக்கி குறைத்து கண்ணீர் விட்டு தனது வேதனையை வெளிப்படுத்தி வருகிறது.
இதனால் ஆச்சரியமடைந்த பாலகிருஷ்ணனின் மகன், தனது தந்தையின் புகைப்படத்தை நோக்கி வளர்ப்பு நாய் குறைத்துக் காட்டி வேதனையை வெளிப்படுத்தும் வீடியோ காட்சிகளை சோசியல் மீடியாவில் பகிர, அது வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…