தந்தையுடன் புத்தாடை வாங்கச் சென்ற சிறுவன், மாஞ்சா நூலால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் பெலகாவி நகரில், தீபாவளிக்கு புத்தாடை வாங்க தந்தையுடன் 6 வயதுடைய சிறுவன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளான். அந்த சமயத்தில், காற்றாடியின் மாஞ்சா கயிறு ஒன்று காற்றில் பறந்து சிறுவனின் கழுத்தை அறுத்துள்ளது. இதில், படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கர்நாடகாவில், மாஞ்சா நூலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…