Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குழந்தையில் தலையில் மாட்டிக்கொண்ட பாத்திரம்...

Bala August 19, 2022 & 14:15 [IST]
குழந்தையில் தலையில் மாட்டிக்கொண்ட பாத்திரம்...Representative Image.


 இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பாத்திரத்தில் தலையை விட்டு மாட்டிக் கொண்ட ஒன்றரை வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த கிளாக்குளத்தைச் சேர்ந்த பழனிச்சாமி-வனிதா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை அஜித் சமையலறையில் உள்ள பாத்திரத்தை எடுத்து தலையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பாத்திரம் அஜித்தின் தலையில் சிக்கிக் கொண்டது. 

இதனையடுத்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த பெற்றோர் பாத்திரத்தை எடுக்க முயன்றும் முடியாததால், பரமக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு குழந்தையை அழைத்துச் சென்றனர். அங்கு சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் குழந்தையின் தலையில் இருந்த பாத்திரத்தை வெட்டி அகற்றினர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்