Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி.. அச்சுறுத்தும் காய்ச்சல்.. அச்சத்தில் மக்கள்!!

Sekar [IST]
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி.. அச்சுறுத்தும் காய்ச்சல்.. அச்சத்தில் மக்கள்!!Representative Image.

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் மாணவர்களிடையே காய்ச்சல் பாதிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்று மட்டும் 150 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாவே மாணவர்களிடையே வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகமாக இருப்பதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக புதுச்சேரி முழுவதும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, இன்று முதல் செப்டம்பர் 25 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து புதுச்சேரி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், காய்ச்சல் காரணமாக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 150 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குநர் ஸ்ரீராமலு தெரிவித்துள்ளார். மேலும் அரசு மருத்துவமனையில் புற நோயாளிகளாக தினமும் காய்ச்சல் பாதிப்புக்காக 50 முதல் 100 பேர் வரை வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். 

எனினும் தேவையான படுக்கை வசதிகள் மற்றும் மருந்துகள் இருப்பதால் மக்கள் யாரும் பயம் கொள்ள தேவையில்லை என்றும் காய்ச்சல் பாதிப்புகள் கட்டுக்குள் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்