மின் கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அஇஅதிமுக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு மின் மத்திய அரசு உயர்த்த வற்புறுத்துவதாக கூறி தமிழக அரசு மின் கட்டனத்தை உயர்தியது. அதனைதொடர்ந்து ஜிஎஸ்டி காரணம் காட்டி ஆவின் பொருட்களின் விலையையும் மாநில அரசு உயர்த்தியதால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.
இந்நிலையில் மின் கட்டணம் உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து மாவட்ட தலைநகரங்களில் இன்று அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அத்ன்படி பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…