நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக முதல் பழங்குடியின பெண் திரெளபதி முர்மு இன்று பதவியேற்றார்.
குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்மு இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக இன்று அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அவருக்கு தலைமை நீதிபதி என்வி ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வியாழன் அன்று எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை தோற்கடித்து முதல் பழங்குடியினராகவும், அரசியலமைப்புச் சட்டத்தில் பதவி வகித்த இரண்டாவது பெண்மணியாகவும் முர்மு இன்று பதவியேற்றுள்ளார். குடியரசு தலைவரான திரெளபதி முர்முவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…