ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் சில நாட்களுக்கு முன்பு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இது, பயணிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் ஒன்றிய விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, பயணிகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது. பாதுகாப்பிற்கு இடையூறாக இருக்கும் சிறிய தவறுகூட முழுமையாக விசாரிக்கப்பட்டு சரி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விமானப் போக்குவரத்து விதிகள், 1937 இன் விதி 134 மற்றும் அட்டவணை XI இன் கீழ் "பாதுகாப்பான, திறமையான மற்றும் நம்பகமான விமான சேவைகளை வழங்க" ஸ்பைஸ்ஜெட் தவறிவிட்டது என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும்,
மோசமான உள் பாதுகாப்பு மேற்பார்வை மற்றும் போதுமான பராமரிப்பு நடவடிக்கைகள்,இல்லாததை கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த சம்பவங்கள் காட்டுவதாகவும், இவை பாதுகாப்பு விளிம்புகளின் சீரழிவுக்கு வழிவகுத்துள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது," என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…