தைவான் கடற்கரையிலிருந்து சுமார் 120 கி.மீ தொலைவில் சீனா போர் பயிற்சியை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தென்சீனாக்கடலில் சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு அதிகரித்து வருகிறது. மேலும் செயற்கை தீவுகளை உருவாக்கி சீனா அதன் எல்லைகளை விரிவுபடுத்துவதாகவும், இதனால் தென்சீனக்கடலில் அமைந்துள்ள மற்ற நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் நிலவி வருவதாக கூறப்பட்டு வருகிறது. தைவான் சீனாவின் ஒரு அங்கம் என கூறி வரும் நிலையில் அமெரிக்கா செனட் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி அதிகாரப்பூர்வமாக தைவான் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த சீனா, நான்சி தைவான் சென்றால் சீனா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும், தைவான் விவகாரத்தில் தலையிடுவது நெருப்புடன் மோதுவதற்கு சமம் என எச்சரித்தது.
மேலும், ஜனாதிபதி ஜோ பிடன் வெள்ளிக்கிழமை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் சுமார் 2 மணி நேரம் பேசினார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் உலக நடப்புக்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக குறிபிடப்பட்டது. ஆனால் சீனா வெளியிட்ட அறிக்கையில், தைவான் விவகாரத்தில் தலையிடுவது நெருப்புடன் மோதுவதற்கு சமம் என கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியது. இவை சீனாவின் கருத்துக்கு அமெரிக்கா செவிசாய்க்கவில்லை என்று தான் அர்த்தம் என சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர். வார்த்தைகளால் நிறுத்திக்கொள்ளாத சீனா, நான்சி பெலோசியின் வருகைக்கு முன்னதாக, தைவான் கடற்பரப்பில் சனிக்கிழமை மிகப்பெரிய போர்பயிற்சியை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது. தைவான் கடற்கரையிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் சீனப் பயிற்சிகள் நடைபெற உள்ளன.
இதனையடுத்து தென்சீனக்கடலில் நிலைகொண்டுள்ள யுஎஸ்எஸ் ரோலண்ட் ரீகன் என்ற விமானம் தாங்கி கப்பல், ஃபியரி கிராஸ் ரீஃப் பகுதி அருகே சீன போர்க்கப்பல்களுக்கு அருகில் சென்றதால் பதற்றம் அதிகரித்தது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…