அதிமுகவின் முதல் எம்பி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்
அதிமுக தொடங்கப்பட்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.-ஆக தேர்வான மாயத்தேவர் (88) உடல்நலக் குறைவால் இன்று சின்னாளப்பட்டியில் காலமானார்.
திமுகவில் இருந்து விலகிய எம்ஜிஆர், அதிமுகவை தொடங்கி 1973ம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தலில் வென்று திண்டுக்கல் எம்.பி. ஆனவர் மாயத்தேவர்.
அந்த வகையில் அதிமுகவின் முதல் எம்பி என்ற பெருமையைப் பெற்றார். மேலும், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தேர்வு செய்தவரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இரட்டை இலை சின்னத்தை தேர்வு செய்த மாயத்தேவர், இச்சின்னம் வெற்றியை குறிக்கும் என்றும் மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்க முடியும் என்றும் எம்ஜிஆரிடம் கூறினார். இதனை எம்ஜிஆரும் ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…