அல் கயிதா தலைவர் கொல்லப்பட்டுள்ள நிலையில் வெளிநாடு செல்லும் அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் காபூலில் பதுங்கி இருந்த அல் கயிதா தலைவர் அல் ஜவாஹிரி அமெரிக்க ராணுவம் நடத்திய வான் வழித்தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்கா திபர் ஜோ.பைடன் உறுதிப்படுத்தினார். மேலும் அமெரிக்காவுக்கு ஆபத்தாக இருப்பவர்கள் எங்கே பதுங்கி இருந்தாலும், எவ்வளவு காலம் ஆனாலும் அவர்கள் கட்டாயம் கொல்லப்படுவார்கள் என்றும் சூலுரைத்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு அமெரிக்கா நடத்திய பெரிய வான் வாழித்தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அல் ஜவாஹிரியின் ஆதரவாளர்கள் அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்தகவல்கள் கிடைத்துள்ளதால், அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அதிபர் பைடன் பயண எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் வெளிநாடுகளுக்கு செல்லும் அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கு வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…