Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அடுத்த குறி தென்னிந்தியா தான்:- அமித்ஷாவின் மாஸ்டர் ப்ளான்...!

Bala July 04, 2022 & 19:39 [IST]
அடுத்த குறி தென்னிந்தியா தான்:- அமித்ஷாவின் மாஸ்டர் ப்ளான்...!Representative Image.


இந்தியாவில் அடுத்த  30 முதல் 40 ஆண்டுகள் இனி பாஜகவின் காலம் தான் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளது பேசு பொருளாக மாறியுள்ளது.

தெலங்கான தலைநகர் ஹைதாராபத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.  இரண்டாம் நாள் கூட்டத்தில் அமைச்சர் அமித்ஷா பல தீர்மானங்களை முன்மொழிந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அசாம் முதலமைச்சர், அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் இந்தியாவில் பாஜவின் சகாப்தமாக இருக்கும் என்றும், இந்த காலகட்டத்தில் இந்தியா உலகிற்கே தலைமை தாங்கும் என அமித்ஷா பேசியதாக தெரிவித்தார். மேலும் தெலங்கானா, மேற்கு வங்கத்தில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும், தமிழ்நாடு , ஒடியா ஆகிய மாநிலங்களில் பாஜக விரைவில் ஆட்சியை கைப்பற்றும் என்றும் பாஜகவின் அடுத்த  வளர்ச்சி தென்னிந்தியா மையப்படுத்தி தான் இருக்கும் என அமித்ஷா கூறியதாக தெரிவித்தார். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்