ஆசிய கோப்பை 2022 கிரிக்கெட் போட்டி ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்றது. இந்த போட்டியில், ஆப்கானிஸ்தான் வீரர் ஃபரித் அகமதை, பாகிஸ்தான் அணி வீரரான ஆசிஃப் அலி பேடால் தாக்க வந்ததாக கூறப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆசிய கோப்பை 2022 கிரிக்கெட் போட்டி நேற்று அதாவது செப்டம்பர் 7 ஆம் நாள் ஷார்ஜாவில் நடைபெற்றது. வாழ்வா, சாவா என்ற கட்டத்தில் இந்த இரு அணிகளுக்கிடையே போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர் முடிவில் 129 ரன்களை எடுத்தது.
130 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற களமிறங்கியது. அப்போது 87 ரன்கள் இருக்கும் போது 3 விக்கெட்டுகள் இருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து 6 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. கடைசி ஓவரில் ஒரு விக்கெட் இருந்த நிலையில், பாகிஸ்தான் அனி வெற்றி பெற 11 ரன்கள் தேவைப்பட்டது. இந்த சமயத்தில் பாகிஸ்தான் வீரரான நஷிம் ஷா 2 சிக்சர்களை விளாசினார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணி வீரரான ஆசிஃப் அலி தனி ஆளாக நின்று போராடிய போது திடீரென ஆட்டமிழந்தார். இதனைக் கண்ட ஆப்கானிஸ்தான் வீரர் ஃபரித் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து கத்தியுள்ளார். இதனால் கடுப்பான பாகிஸ்தான் வீரர் ஆசிஃப் அலி, பேட்டை எடுத்து, ஃபரித்தை அடிக்க முயன்றார். இதனால், இரு அணிகளுக்கான ரசிகர்களுக்கும் தகராறு நடந்தது குறிப்பிடத்தக்கது. களத்தில் நடந்த இந்த கலவரத்தால், குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் ஐசிசி நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…