Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

செப்டம்பர் 15 முதல்.. பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்பு!!

Sekar September 07, 2022 & 15:44 [IST]
செப்டம்பர் 15 முதல்.. பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்பு!!Representative Image.

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

அரசுப்பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சத்தான காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த திட்டம் முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் 292 கிராம பஞ்சாயத்துகளில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட உள்ளது. 

பின்னர் இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக இளம்பகவத் ஐஏஎஸ் அதிகாரியையும் தமிழக அரசு நியமித்தது. இதற்கான அரசாணை கடந்த மாதம் வெளியானது. 

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி மதுரையில் காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்