அசாம் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
அசாம் மாநிலத்தில் பெய்த மழை காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வெள்ளம் காரணமாக 22 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பர்பெட்டா, கச்சார், தர்ராங், கரீம்கஞ்ச் மற்றும் மோரிகான் மாவட்டங்களில் நீரில் மூழ்கி 4 குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இரண்டு மாவட்டங்களில் இருவர் காணாமல் போயுள்ளனர். இதனையடுத்து காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விமானப்படை உதவியுடன் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…