கடலூர் மாவட்டத்தில் இளம்பெண்ணை கொடூரமாக தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்து பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெத்த நாயக்கன் குப்பத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், ஆண்டிமடம் பகிதியை சேர்ந்த வாலிபருக்கும், வருகின்ற 10ம் தேதி திருமணம் நட்டக்கப்போவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் ஸ்ரீ தர் இளம்பெண்ணை வெள்ளாற்று அருகே அழைத்து சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் பையில் வைத்திருந்த சுத்தியலை எடுத்து பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் அந்த பென் ரத்த வெள்ளத்தில் மிதந்தபடியே கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், தப்பியோடிய இளைஞரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கடலூர்-வடலூர் சாலையில் பாமவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…