கலர் அப்பளம் சாப்பிட்டால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எசரித்துள்ளனர்.
குழந்தைகளை கவர கலர் கலராக விற்கப்படும் குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றில் அனுமதிக்கப்படாத நிறமிகள் சேர்க்கப்படுவதால், அவற்றை உட்கொள்வோருக்கு அல்சர், கேன்சர் போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அப்பள பாக்கெட்களில் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர், முகவரி, தயாரிப்பு தேதி பயன்படுத்தக்கூடிய கால அளவு, சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் குறித்த விவரங்கள் இல்லாவிட்டாலோ தரக் குறைவாக இருந்தாலோ 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என உணவு பாதுகாப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…