புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலின் தீட்சிதர்கள், கடந்த சில நாள்களாகவே குழந்தை திருமண விவகாரத்தில் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
அதாவது தீட்சிதர்கள் தங்கள் குழந்தைகளை, திருமண வயது எட்டும் முன்பே, திருமணம் செய்து வைப்பதாக புகார்கள் எழுந்தன. அதன் படி, கடந்த ஆண்டு நடைபெற்ற குழந்தைத் திருமணம் தொடர்பாக, கடந்த வாரம் இரண்டு தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தீட்சிதர்கள் மேலும், ஒரு குழந்தைத் திருமணத்தை நடத்தி வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிதம்பரம் கோவில் தீட்சிதரின் 13 வயது மகளுக்கு 19 வயது இளைஞருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில், சிறுமியின் தந்தை, தாய் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்ற நான்கு பேரை தேடி வருகின்றனர்.
சிதம்பரம் கோவிலின் தீட்சிதர்கள் தொடர்ந்து குழந்தைத் திருமணத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…