நடிகருடன் காருக்குள் இருந்த தேசிய விருது பெற்ற நடிகையை அவரது மனைவி நடுரோட்டில் பிடித்து வெளுத்துவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.
தேசிய விருது பெற்ற ஒடியாவை சேர்ந்த நடிகை ப்ரக்ருதி மிஸ்ரா பிரபல ஒடியா நடிகரான பாபுசன் மெஹந்தியுடன் புவனேஷ்வரில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வெறி பிடித்த வேங்கையாக வந்த நடிகர் பாபுசன் மொஹந்தியின் மனைவி த்ருப்தி, சினிமா பாணியில் காரை வழி மறித்தார். பின்னர் இறங்கி வந்த த்ருப்தி காருக்குள் இருந்த நடிகை ப்ரக்ருதி மிஸ்ராவை சரமாரியாக தாக்கினார். ஒரு கட்டத்தில் பாதுகாப்பு கருதி நடிகை ப்ரக்ருதியும் தாக்கியதால் சண்டை முற்றியது.
மேலும் நடிகை ப்ரக்ருதி மிஸ்ராவை கேட்கவே முடியாத கெட்ட வார்த்தைகளாலும் அர்ச்சனை செய்தார் த்ருப்தி. இதனையடுத்து ஆளை விட்டால் போதும் என்று எதிரே வந்த ஆட்டோவில் நடிகை மிஸ்ரா தப்பியோடினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது. இதனைதொடர்ந்து நடிகை மிஸ்ராவின் தாயார் த்ருப்தி மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…