சேலம் கோட்ட அரசுப்பேருந்துகளில் பணிபுரியும் கண்டக்டர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சேலம் கோட்ட மேலாளர் கூறியதாவது; சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் கண்டகட்ர்கள் மொபைல் போன் பயன்படுத்தியவாறே இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. பகலில் பின் இருக்கையில் இரு படிக்கட்டுகளும் கண்பார்வையில் இருக்கும் படி பார்த்து கொள்ள வேண்டாம், இரவில் ஓட்டுநருக்கு உறுதுணையாக முன் இருக்கையில் அமர்ந்து ஓட்டுநர் விழிப்புணர்வுடன் பேருந்தை இயக்க உதவ வேண்டும். ஆய்வின் போது கண்டக்டர்கள் மொபைல் போன் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஓட்டுநர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…