வேளாங்கண்ணி திருவிழாவின் போது பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் அதிக கட்டணங்கள் வசூலிக்கும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், திருவிழாவின் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா, வருவாய்த்துறை தீயணைப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர். வேளாங்கன்னி திருவிழாவின் போது பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிக கட்டணங்கள் வசூலிக்கும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…