ஆன்லைன் ரம்மியை தடை செய்ய உடனடியாக அவசர சட்டம் தேவை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை, மணலியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொழிலாளி நடராஜ் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்சியையும் சோகத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிக பணத்தை இழந்த நடராஜ் , கடன் சுமையால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
கடந்த 10 மாதங்களில் மட்டும் ஆன்லைன் ரம்மி காரணமாக 24 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்தை பிறப்பிப்பது குறித்து பரிந்துரைக்க வல்லுனர் குழுவை அமைத்துள்ள தமிழ்நாடு அரசு , உடனடியாக அவசர தடை சட்டம் கொண்டு வர வேண்டும்'' என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…