Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒரே கல்லூரியில் 30 மாணவர்கள்.. தமிழகத்தை உலுக்கும் கொரோனா!!

Sekar June 26, 2022 & 12:14 [IST]
ஒரே கல்லூரியில் 30 மாணவர்கள்.. தமிழகத்தை உலுக்கும் கொரோனா!!Representative Image.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 30 பேருக்கு ஒரே நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 750 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைந்து வரும் இந்த நேரத்தில் அங்கு மாணவர்கள், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில் 200  மாணவர்கள் பங்கேற்ற நிலையில், அதில் 30 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவர்களை தனிமைப்படுத்தியுள்ள கல்லூரி நிர்வாகம், வகுப்புகளை ஆன்லைன் மூலன் நடத்த ஆரம்பித்துள்ளது.

இதேபோல் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 160 மாணவர்களிடம் சோதனை செய்யப்பட்டதில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்