பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சென்ற ஸ்டீமர் படகு மாநில தலைநகரில் கங்கை நதிக்கரையில் உள்ள ஜேபி சேது தூணில் மோதி விபத்திற்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக முதல்வர் நிதிஷ் குமார் காயமின்றி உயிர் தப்பினார்.
கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள சாத் காட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். முதல்வர் உட்பட படகில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று போலீசார் மேலும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : 40 வயதிலும் அதே இளமையுடன் இருக்கும் த்ரிஷாவின் அழகு ரகசியம்..
ஸ்டீமர் படகு சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தூணில் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
படகுக்கு குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், அதில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…