கோலிவுட்டின் பிரபல ஜோடியான நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் நடந்து 4 மாதங்களில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற சம்பவம் கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி இது குறித்து அரசிடம் விளக்கம் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் கொண்டாடிவிட்டு இருவரும் தத்தமது வேலைகளில் பிசியாகி விட்டனர்.
இந்நிலையில் கடந்த வாரம் வாடகை தாய் மூலமாக இரட்டைக் குழந்தை பெற்றுள்ளனர். கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி அந்த குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளது சட்டவிதிமுறைகளை மீறுவதாகவும் என்று கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. மேலும் போலீசில் இது குறித்து புகார் கூட அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நயன்-விக்கி ஜோடியின் வாடகை தாய் விவகாரம் குறித்து விசாரிக்க சுகாதார இணை இயக்குனர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை அமைச்சர் மா.சுப்ரமணியன் அமைத்தார்.
அவர்கள் விசாரணை நடத்தியபோது, கடந்த 2022 டிசம்பர் மாதமே வாடகைத் தாய் முறையில் குழந்தை பெறும் ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டதாக விசாரணை குழுவிடம் நயன்-விக்கி ஜோடி தெரிவித்து அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளது.
மேலும், அதனுடன் 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்ததற்கும் அவர்கள் ஆதாரங்களை சம்ர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நயன்-விக்கி ஜோடி எந்த சட்டவிதிமீறலிலும் ஈடுபடவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…