தமிழ்நாடு அரசை கண்டித்து பாஜகவினர் இன்று பேரணி நடத்தவுள்ளனர்.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு மே 21ம் தேதி குறைத்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் மாநில அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பாக இன்று பேரணி நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதன்படி சென்னை தலைமை செயலகத்தை நோக்கி இன்று காலை அண்ணாமலை தலைமையில் பேரணி நடத்தப்படவுள்ளது.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…