டில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
டில்லி ஆம் ஆத்மி அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் சத்யேந்திர ஜெயின். இவர் உள்பட 6பேர் மீது, போலி நிறுவனங்கள் மூலம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக 2018ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் ஹவாலா பணப் பரிவர்த்தனையும் நடைபெற்று இருப்பதாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறை, தற்போது அவரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஏற்கனவே பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஆம் அத்மி கட்சி, அங்கு விஜபிகளுக்கு வழஙக்ப்ப்பட்ட பாதுகாப்பை ரத்து செய்த நிலையில், பாடகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…