Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்....! மோப்ப நாய்களுடன் விரைந்த போலீசார்..!

Bala June 22, 2022 & 12:53 [IST]
ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்....!  மோப்ப நாய்களுடன் விரைந்த போலீசார்..!Representative Image.

செங்கல்பட்டு: தாம்பரம் ரயில் நிலையத்துக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. 

தாம்பரம் ரயில்வே நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக மர்ம நபர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து  வெடிகுண்டு சோதனை கருவிகள், மோப்ப நாய்களுடன்  விரைந்த போலீசார், ரயில்வே நிலையம் முழுவதும் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் எதுவும் சிக்காத நிலையில்,  மிரட்டல் விடுத்த நபரின் போன் கால் எங்கிருந்து வந்தது என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பத்தால் ரயில்வே நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்